Tuesday, 21st May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பறிமுதல்

மார்ச் 21, 2020 07:48

தஞ்சாவூர்: கும்பகோணத்தில் சாக்கோட்டை பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில் இன்று சாக்கோட்டை மற்றும் சுற்றுப்புற பகுதியில் ஆய்வு செய்தனர் அப்போது ஒரு வீட்டில் ஐந்து கிலோ கஞ்சா பதுக்கி வைத்தது தெரியவந்தது. கஞ்சா பதுக்கி வைத்திருந்த சாக்கோட்டை பகுதி அம்பேத்கர் நகரை சேர்ந்த தமிழரசு மற்றும் செல்வம் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர். செல்வம் தமிழரசு தொலைபேசிக்கு தொடர்ந்து நூற்றுக்கு மேற்பட்ட இளைஞர்கள் கஞ்சா பொட்டலம் கேட்டு தொடர்ந்து அழைப்பு வந்து கொண்டே இருக்கிறது என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து நாச்சியார்கோவில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தலைப்புச்செய்திகள்